அடுத்த ஷாக்.. பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. கிடுகிடுவென அதிகரித்த புதுச்சேரி பாண்லே நிறுவனம்!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல் பால் விற்பனை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை கிடுகிடுவென உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஷாக் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாக ஆவின் உள்ளது. சமீபத்தில் தொடர்ந்து ஆவின் பால் விலை மற்றும் பிற பொருட்களின் விலைகள் என்பது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்ப தெரிவித்தனர். இருப்பினும் விலை ஏற்றம் நடைமுறையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரிய ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

பாண்லே பால் நிறுவனம்
புதுச்சேரியில் அரசு நிறுவனமாக பாண்லே உள்ளது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்து வரும் பணியை பாண்லே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34 ஆக இருந்த நிலையில் ரூ.3 உயர்த்தி ரூ.37 ஆக அதிகரிக்கப்பட்டது.

லிட்டருக்கு ரூ.4 உயர்வு- நாளை அமல்
இந்த கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் விரைவில் பால் விலையும் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் பாண்லே பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உயர்த்தப்பட்ட பால் விற்பனை விலை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

பால் பாக்கெட்டுகளின் புதிய விலை
இதுபற்றி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா வெளியிட்ட உத்தரவில், ‛‛நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ.42ல் இருந்து ரூ.46க்கும், பச்சை நிற பாக்கெட் (ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ.44ல் இருந்து ரூ.48க்கும், ஆரஞ்சு நிற பாக்கெட் (ஸ்டேன்டர்ட் மில்க்) ரூ.48-ல் இருந்து ரூ.52-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இரு பாக்கெட் பால் அறிமுகமாகிறது. டபுள் டோன்ட் மில்க் என மஞ்சள் நிற பால் பாக்கெட் ரூ.42க்கும், புல் கீரிம் பால் என்ற சிவப்பு நிற பாக்கெட் பால் ரூ.62-க்கும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.

மக்கள் ஷாக்
இந்த விலை உயர்வால் பாண்லே நிறுவனத்தின் பால் பயன்படுத்தி வரும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை தொட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலையும் உயர்ந்துள்ளதே என அவர்கள் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications