5 கி.மீ. பேரணி நடத்திய கல்லூரி மாணவிகள்.. பஸ் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்த பாசக்கார புதுவை போலீஸ்
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கி.மீ பேரணியாக நடந்து வந்து சட்டப்பேரவை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவிகளை, போராட்டம் முடிவடைந்ததும் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியிலேயே பத்திரமாக இறக்கி விட்டார்கள் பாசக்கார புதுச்சேரி போலீசார்.
அரசு கல்லூரி மற்றும் கூட்டுறவு கல்லூரிகளில் உள்ள கட்டண வேறுபாடுகளை கலைய வேண்டும், அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் மாணவ மாணவிகள்.

இவர்கள் கதிர்காமம் பகுதியில் செயல்பட்டுவரும் இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்பவரகள். இந்த கல்லூரியின் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சட்டமன்றம் நோக்கி 5 கி.மீ நடந்தே பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்த மாணவர்களை சட்டப்பேரவை அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் 5 கி.மீ நடந்தே வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால், அங்கிருந்த போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறைக்கு சொந்தமான பேருந்தை வரவழைத்து, மாணவிகள் அனைவரையும் பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியில் பத்திரமாக இறக்கிவிட்டனர். போலீசாரின் இந்த மனிதநேயம்மிக்க செயலுக்கு மாணவிகள் அனைவரும் புன்னகையுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications