5 கி.மீ. பேரணி நடத்திய கல்லூரி மாணவிகள்.. பஸ் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்த பாசக்கார புதுவை போலீஸ்
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கி.மீ பேரணியாக நடந்து வந்து சட்டப்பேரவை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவிகளை, போராட்டம் முடிவடைந்ததும் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியிலேயே பத்திரமாக இறக்கி விட்டார்கள் பாசக்கார புதுச்சேரி போலீசார்.
அரசு கல்லூரி மற்றும் கூட்டுறவு கல்லூரிகளில் உள்ள கட்டண வேறுபாடுகளை கலைய வேண்டும், அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் மாணவ மாணவிகள்.

இவர்கள் கதிர்காமம் பகுதியில் செயல்பட்டுவரும் இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்பவரகள். இந்த கல்லூரியின் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சட்டமன்றம் நோக்கி 5 கி.மீ நடந்தே பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்த மாணவர்களை சட்டப்பேரவை அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் 5 கி.மீ நடந்தே வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால், அங்கிருந்த போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறைக்கு சொந்தமான பேருந்தை வரவழைத்து, மாணவிகள் அனைவரையும் பேருந்தில் ஏற்றிகொண்டு கல்லூரியில் பத்திரமாக இறக்கிவிட்டனர். போலீசாரின் இந்த மனிதநேயம்மிக்க செயலுக்கு மாணவிகள் அனைவரும் புன்னகையுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications