புதுச்சேரியை மிரட்டும் பன்றிக் காய்ச்சல்.. 15 பேர் பாதிப்பு.. சிலருக்கு வீட்டிலேயே சிகிச்சை!
புதுச்சேரி: புதுச்சேரியில் 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, 8 பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 500 பேருக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். கடந்த 9 நாட்களில் மட்டும் 4,812 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

புதுசேரி அரசு மருத்துவமனைகளில் 434 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 36 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டில் 170 பேரும், காரைக்காலில் 18 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பல மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்தவர்கள் மூலம், புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதாரத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 110 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னர் நேற்று 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், நேற்று ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என 7 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள 8 பேர், அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications