கடலூரில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா.. எல்லாருமே கோயம்பேடு போனவங்க
கடலூர்: கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு திரும்பி 107 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறிவிட்டதோ? என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் நகரப்பகுதியை சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால், தற்போது கிராமப்புறங்களை சேர்ந்தவர்களே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்கள். இதனால் கடலூர் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 129 இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் தனிமைப்படுத்தி, அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், அப்பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளி மாநிலங்களிலிருந்து அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவலை கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications