புதுச்சேரியில் துணை ராணுவம்.. அறிவிக்கப்படாத அவசரநிலை.. மாஜி முதல்வர் நாராயணசாமி பகீர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை அமல் படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில், மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, பாதுகாப்பு காரணமாக புதுச்சேரிக்கு திடீரென துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. பின்னர், போராட்டம் நடத்திய தொழிலாளர்களை, நள்ளிரவில் துணை ராணுவப்படையின் உதவியுடன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

தனியார்மயமானால் ஆபத்து
மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார கட்டணம் உயர்த்துவதோடு விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய இலவச மின்சார நிறுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் உள்ளது. மின்துறை தனியார் மையம் என்பது கொள்கை முடிவு என்று துணைநிலை ஆளுநர் குறிப்பிடுகிறார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கொள்கை முடிவு ஏற்கப்படும் ஒன்றாகும்.

கலந்து ஆலோசிக்கவில்லை
மின்துறை தனியார் மாயமாக்குவது சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசு என்பது மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவே தவிர, மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல. மின்துறை தனியார் மையம் டெண்டரை நிறுத்தி வைத்து விட்டு, மக்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

அறிவிக்கப்படாத அவசர நிலை
தனியார் மயத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் எச்சரித்தார். மேலும், துணை ராணுவத்தை புதுச்சேரியில் இறக்கியும் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மக்கள் விரோத திட்டங்கள் திணிக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி துணை போகிறார்.

நீதிமன்றம் சொல்வோம்
மின்துறை தனியார் மையமாக்கினால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல கூட தயாராக உள்ளோம். பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் வேஷம் போட்டுக்கொண்டு, அமைச்சர்கள் நடிக்கிறார்கள். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைத்தது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications