அலையாய் அலைந்த ஆனந்த், ஆதவ்! நேரில் கேட்டும் மறுத்த ரங்கசாமி! புதுச்சேரியிலும் விஜய்க்கு சிக்கல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு ஆய்வு செய்து, காவல்துறையிடம் அனுமதி கேட்க வந்த ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ரோட் ஷோவுக்கு அனுமதியில்லை எனவும், வேண்டுமானாலும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் தரப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் வருகின்ற 5-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கடந்த புதன்கிழமை புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர்.
அதன்படி காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை நடைபெறும் ரோடு ஷோவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ரோடு ஷோ நடத்த மூன்று நாட்களே உள்ள நிலையில் இதுவரை புதுச்சேரி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

விஜய் ரோடு ஷோ
கரூர் சம்பவத்தை மேற்கோள்காட்டி அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா விஜய் பேசும் சாலைகளில் ஆய்வு செய்த அவர்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணனை சந்தித்து அனுமதி கோரி காவல் நிலையம் வந்தனர். அப்போது எஸ்.பி இல்லாததால் தொடர்ந்து முதலமைச்சர் இல்லம் சென்ற அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து காமராஜர் புத்தகத்தை பரிசாக வழங்கினர்.
தவெக அனுமதி விவகாரம்
தொடர்ந்து அவர்கள் விஜய் பேசும் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கோரிக்க வைத்தனர். இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு பிறகு புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லையென்று சபாநாயகர் செல்வம் கூறியுள்ள நிலையில், வேண்டுமானாலும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் தரப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் செல்வம்
இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியான முடிவல்ல. ஏனென்றால் கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.அதன் பிறகு புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவது ஏற்புடையதல்ல.
கரூர் சம்பவம் தாக்கம்
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் விரிந்த சாலைகள் இல்லை. அவர்கள் கேட்கப்படும் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் கொண்டது. எனவே ரோடு ஷோவை தவிர்த்து ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம். ரோடு ஷோவிற்கு அனுமதிக்க மாட்டோம். ரோடு ஷோ குறித்து நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேவைப்பட்டால் உப்பளம் மைதானம் போன்ற இடங்களில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்" என்றார்.
விஜயின் ரோடு ஷோ
இந்த நிலையில் விஜயின் ரோடு ஷோ திட்டத்தை கைவிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அங்கேயே தங்கி இருக்கும் நிலையில் ரோட் ஷோவை பொதுக்கூட்டமாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்த கால இடைவெளியே இருப்பதால் இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து தர முடியாது என சொல்லப்படுகிறது. இதை அடுத்து விஜயின் புதுச்சேரி நிகழ்வு சற்று தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.
-
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications