கொடுமை தாங்காமல் பிரிந்து போன லதா.. தேடி சென்று கொன்று தீர்த்த வெறி பிடித்த வேலுச்சாமி
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை: பிரிந்து சென்ற மனைவியை தேடி சென்று, கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த தம்பதி வேலுசாமி-லதா. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில் வேலுச்சாமியின் கொடுமையை பொறுக்க முடியாத லதா, குழந்தைகளை அழைத்துகொண்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.

2 குழந்தைகள்
அவர்களை காப்பாற்ற ஒரு விராலிமலை பஸ் ஸ்டேண்டில் இருக்கும் ஃபேன்சி ஸ்டோரில் வேலைக்கும் செல்கிறார். காலையில் பிள்ளைகளை காலையிலும், மாலையிலும் ஸ்கூலில் கொண்டு போய் விட்டு சாயங்காலம் கூப்பிட்டு வருவதுதான் லதாவின் வழக்கம்.

தகராறு செய்த வேலுசாமி
இன்று காலையும் வழக்கம்போல் 2 பிள்ளைகளையும் ரெடி பண்ணி ஸ்கூலில் விட்டுவிட்டு கடைக்கு வந்தார் லதா. அப்போது கடையில் வேலுசாமி சண்டைக்கு தயாராக நின்று கொண்டிருந்தார். கடையிலேயே சண்டை ஆரம்பமானது.

ஸ்டேஷனில் சரண்
பிறகு ஆத்திரம் அடைந்த வேலுசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். இதில் நிலைகுலைந்து விழுந்த லதா ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே பிணமாக சரிந்தார். பிறகு வேலுசாமி கத்தியுடன் விராலிமலை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டிப்பிடித்து அழுதனர்
லதா இறந்த சம்பவம் பள்ளியில் இருந்த குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பாடு ஊட்டிவிட்டு, ஸ்கூலில் கொண்டு வந்து விட்ட தாய், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு குழந்தைகள் கதறி துடித்தனர். லதாவின் உடலை கட்டிப்பிடித்துகொண்டு பிள்ளைகள் அழுதது அங்கிருந்த அனைவரையும் உலுக்கி போட்டுவிட்டது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications