Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரு பாஸ்? ஷாயாஜி ஷிண்டேவா.. அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்பி அப்துல்லா பரபரப்பு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே வெளி வருவார் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

    Annamalai எச்சரிக்கை |DMK-வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் | *Politics

    தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் போது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால், இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று தெரிவித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    No Shinde is likely to come out of DMK Rajya Sabha MP Abdullah Reply to Annamalai

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஆறு இடங்களில் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா திறந்து வைத்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டது. அதனை முழுவதுமாக புதுக்கோட்டை நகரின் பல்வேறு நிகழ்ச்சி திட்ட பணிகளுக்கு வழங்கிவிட்டேன் அடுத்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக நிதி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.5 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், குஜராத் வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் இருந்து மோடி மற்றும் அமித்ஷா விடுவிக்கப்பட்ட நிலையில் ராதாரவி இருவரையும் குற்றவாளி என்று கூறியுள்ளதற்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அண்ணாமலை கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சாயா ஸ்ரீ ஷிண்டே என்று ஒரு நடிகர் உள்ளார். அவரும் திமுகவில் இல்லை. எனவே எந்த ஷிண்டேயும் திமுகவிலிருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+