சவுதி, யூஏஐ உள்பட 6 அரபு நாடுகளில் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு தடை.. ஏன் தெரியுமா?
டெல்லி: ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛துரந்தர்'. இந்த திரைப்படத்தை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட 6 அரபு நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் தற்போது நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛துரந்தர்'. திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா, அர்ஜூன் ராம்பால், மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஆதித்ய தார் இயக்கி உள்ளார். 2016ல் காஷ்மீரின் உரி தாக்குதலை மையப்படுத்தி ‛உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் 2019'என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக அவர் ‛துரந்தர்' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த ‛துரந்தர்' திரைப்படம் ‛ஸ்பை த்ரில்லர்' படமாகும். அதாவது உளவு அதிகாரியின் கதைக்களமாக இந்த திரைப்படம் உள்ளது. 1999ம்ஆம் ஆண்டு கந்தகாரில் இந்திய விமானம் கடத்தப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. இதற்கெல்லாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஹம்ஸா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாக ரன்வீர் சிங் நுழைகிறார். அதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை கண்டுபிடித்து பதிலடி கொடுத்தாரா? என்பது தான் திரைப்படத்தின் கதையாகும்.
இந்நிலையில் தான் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட 6 அரபு நாடுகளும் தடை விதித்துள்ளன. பாலிவுட் திரைப்படங்களுக்கு இங்கு அதிகமான ரசிகர்கள் உள்ளன. இந்த 6 நாடுகளும் நல்ல வருவாயை ஈட்டி கொடுக்கும். இந்நிலையில் தான் ‛துரந்தர்' திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான சிந்தனையுடன் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி அரபு நாடுகள் தடை போட்டுள்ளன. அரபு நாடுகளில் எப்படியாவது இந்த திரைப்படத்தை வெளியிட பட தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‛‛ இந்த திரைப்படம் பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று கருதுவதால் அரபு நாடுகள் அனுமதி வழங்கவில்லை'' என்று கூறினர்.
6 அரபு நாடுகளில் இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டாலும் கூட இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் முதல் வாரத்திலேயே ரூ.200 கோடியை கடந்துள்ளது. திரைப்படம் பற்றி இயக்குநர் ஆதித்ய தார் கூறுகையில், ‛‛துரந்தர் திரைப்படம் உண்மையான ஜியோ பாலிடிக்கிஸ் மற்றும் ரா உளவுத்துறையின் ஆபரேஷன்களை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட முறையில் யாரையும் பற்றி பேசவில்லை.
வெளிநாடுகளில் திரைப்படத்துக்கு தடை வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் வெளியனா ‛பைட்டர்', ஸ்கை ஃபோர்ஸ், தி டிப்ளமேட், ஆர்ட்டிக்கிற் 370, டைகர் 3, தி காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் தடையை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications