மெக்காவில் இருந்த "டவரை" தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்.. அதன்பின் நடந்தது என்ன? தீயாக பரவிய வீடியோ
ரியாத்; சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்த சம்பவத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக மேலிருந்து தாக்கும் மின்னல் இந்த பகுதியில், கட்டடத்தின் மீதிருந்து வான் நோக்கி விரிந்து பரந்து சென்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

மின்னல்
மின்னல் பார்க்க அழகானவையாக தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகும். இந்த மின்னல் தோராயமாக 300 மில்லியன் வாட்ஸ் சக்தி கொண்டதாகும். இதன் மூலம் ஊருக்கே நம்மால் கரண்ட் கொடுக்க முடியும். இவ்வளவு மின்சாரமும் ஒருவரை தாக்கினால் நிச்சயம் அவருக்கு மரணம்தான். இந்நிலையில் மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

உருவாகும் விதம்
மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல், வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் , மேகத்திற்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் என மின்னல்கள் பொதுவாக மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில் மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல், மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எதிர்மின் அயனியானது புவியில் இருக்கும் நேர்மின் அயனியை கவர்ந்திழுக்கும்போது ஏற்படுகிறது. இதுவே மிகவும் ஆபத்தானது. இவ்வகை மின்னலே பூமியில் இருக்கும் மரம், கட்டடம் உட்பட்ட உயரமான இடங்களை தாக்கி, சில நேரங்களில் மனிதனையும் பலி வாங்குகிறது.

ஒலியை விட வேகம்
மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் என்பது மேகத்திற்குள் உள்ள நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி கவர்தலினால் ஏற்படுகிறது. மேகத்தில் உள்ள நேர்மின்அயனி அருகில் இருக்கும் மற்றொரு மேகத்தின் எதிர்மின் அயனியை கவர்தலினால் ஏற்படும் மின்னல் வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் என்கிறோம். பொதுவாக மின்னலும் இடியும் ஒன்றாகத்தான் உருவாகிறது. ஆனால் ஒலியை விட ஒளி வேகமாக பயணிப்பதால் நமக்கு மின்னல்தான் முதலில் தெரிகிறது. இப்படியான நிலையில் மெக்காவில் பதிவான மின்னல் பூமியிலிருந்து வான்நோக்கி விரிந்து சென்றிருக்கிறது.

ஈரப்பதம்
நடப்பு ஜூலை மாதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் அதீத ஈரப்பதம் நிலவி வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பருவமழை குறைந்ததன் விளைவாகவே இந்த அளவு ஈரப்பதம் நிலவி வருவதாகவும், இதன் காரணமாக சவுதி அரேபியாவில் பரவலான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் ஓஹியோவில் மின்னல் ஒன்று தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது மெக்கா மின்னல் சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications