Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''பாட்ஷா பாய்'' மீது கை வைத்த அதிமுக கவுன்சிலர்! அமைச்சர் கே.என்.நேருவுக்கு பறந்த போன் கால்கள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவை அதிமுக கவுன்சிலர் தள்ளிவிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக சேர்மன் மீது அதிமுக கவுன்சிலர் கை வைத்தது பற்றி சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவின் கவனத்துக்கு திமுகவினர் உடனடியாக கொண்டு சென்றனர்.

யார் மீது யார் மீது கை வைப்பது, நம்ம ஆட்சியிலேயே இப்படியா என கொதித்துப் போன அமைச்சர் நேரு, சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறாராம்.

 எடப்பாடி ஊர்

எடப்பாடி ஊர்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் நகராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பாட்ஷா. இவரை பாட்ஷா பாய் என்று தான் அப்பகுதி மக்கள் உட்பட திமுகவினர் அனைவரும் அழைப்பார்கள். என்னதான் சேர்மனாக இருந்தாலும் கூட, அந்தப் பதவிக்கான பந்தாவையும், தோரணையையும் வெளிக்காட்டாமல் எளிமையாக இருக்கக் கூடியவர் பாட்ஷா.

 கீழே தள்ளி

கீழே தள்ளி

இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏதோ வாக்குவாதம் எழுந்தது. அது கைகலப்பில் முடியும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. இதனிடையே பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவின் நெஞ்சில் கை வைத்த அதிமுக கவுன்சிலர் நாராயணன் என்பவர் அவரை தள்ளிவிட்டார். இதனிடையே சுதாரித்துக் கொண்ட பாட்ஷா கீழே விழாமல் மேஜையை பிடித்துக் கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள்

திமுக கவுன்சிலர்கள்

திமுக ஆட்சியில் திமுக சேர்மன் மீதே கைவைக்கும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என ஆவேசம் அடைந்த திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் நாராயணனை சூழ்ந்தனர். இதைப்பார்த்த நகர்மன்றத் தலைவர் பாட்ஷா எல்லோரையும் அமைதிப்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் இந்த நிகழ்வு எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் நடைபெற்றது என்பதால் அது குறித்த தகவலை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Recommended Video

    ADMK-வை பிளவுபடுத்த வேண்டும் என OPS செயல்படுகிறார் - வளர்மதி குற்றச்சாட்டு *Politics
     சட்டப்பூர்வ முறையில்

    சட்டப்பூர்வ முறையில்

    எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அதிமுக கவுன்சிலர்கள் இப்படி ஆடுவதாக புகார் தெரிவிக்கும் திமுக கவுன்சிலர்கள், அமைச்சர் நேரு அறிவுறுத்தல் படி இந்த விவகாரத்தை சட்டப்பூர்வ முறையில் கையாள திட்டமிட்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+