''பாட்ஷா பாய்'' மீது கை வைத்த அதிமுக கவுன்சிலர்! அமைச்சர் கே.என்.நேருவுக்கு பறந்த போன் கால்கள்!
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவை அதிமுக கவுன்சிலர் தள்ளிவிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக சேர்மன் மீது அதிமுக கவுன்சிலர் கை வைத்தது பற்றி சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவின் கவனத்துக்கு திமுகவினர் உடனடியாக கொண்டு சென்றனர்.
யார் மீது யார் மீது கை வைப்பது, நம்ம ஆட்சியிலேயே இப்படியா என கொதித்துப் போன அமைச்சர் நேரு, சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறாராம்.

எடப்பாடி ஊர்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் நகராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பாட்ஷா. இவரை பாட்ஷா பாய் என்று தான் அப்பகுதி மக்கள் உட்பட திமுகவினர் அனைவரும் அழைப்பார்கள். என்னதான் சேர்மனாக இருந்தாலும் கூட, அந்தப் பதவிக்கான பந்தாவையும், தோரணையையும் வெளிக்காட்டாமல் எளிமையாக இருக்கக் கூடியவர் பாட்ஷா.

கீழே தள்ளி
இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏதோ வாக்குவாதம் எழுந்தது. அது கைகலப்பில் முடியும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. இதனிடையே பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக நகர்மன்றத் தலைவர் பாட்ஷாவின் நெஞ்சில் கை வைத்த அதிமுக கவுன்சிலர் நாராயணன் என்பவர் அவரை தள்ளிவிட்டார். இதனிடையே சுதாரித்துக் கொண்ட பாட்ஷா கீழே விழாமல் மேஜையை பிடித்துக் கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள்
திமுக ஆட்சியில் திமுக சேர்மன் மீதே கைவைக்கும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா என ஆவேசம் அடைந்த திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் நாராயணனை சூழ்ந்தனர். இதைப்பார்த்த நகர்மன்றத் தலைவர் பாட்ஷா எல்லோரையும் அமைதிப்படுத்தி அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் இந்த நிகழ்வு எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் நடைபெற்றது என்பதால் அது குறித்த தகவலை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Recommended Video

சட்டப்பூர்வ முறையில்
எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அதிமுக கவுன்சிலர்கள் இப்படி ஆடுவதாக புகார் தெரிவிக்கும் திமுக கவுன்சிலர்கள், அமைச்சர் நேரு அறிவுறுத்தல் படி இந்த விவகாரத்தை சட்டப்பூர்வ முறையில் கையாள திட்டமிட்டுள்ளனர்.
-
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications