சேலம் ஆத்தூர் அருகே சுவரில் மோதி தீப்பிடித்த கார்.. ஓட்டுநர் உயிருடன் எரிந்து பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஆத்தூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் தீயில் கருகி பலியானார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மேம்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரின் ஓட்டுநர் உயிருடன் எரிந்து பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications