காது கூசுதே.. “செத்து போயிடுவ!” கோயிலுக்கு சென்ற தலித் இளைஞரை திட்டி தள்ளிய திமுக நிர்வாகி சஸ்பெண்ட்
சேலத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளரை தற்காலிகமாக நீக்கியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
சேலம்: திருமலைகிரி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக ஒன்றிய செயலாளரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்து இருக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்து இருக்கிறது. இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த இளைஞரை சூழ்ந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்தனர்.

தந்தைக்கு மிரட்டல்
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் பட்டியலின இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளினார். அத்துடன் அங்கு நின்றுகொண்டு இருந்த இளைஞரின் தந்தையையும் காது கூசும் அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார்.

காலி பண்ணிருவேன்
அங்கு நின்ற தலித் மக்களை காட்டி, "இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்." என்றார்.

ஊரில் நடமாட முடியாது
அப்போது ஒருவர் 18 பட்டிக்கும் பொதுவான கோயில் என்று யாரோ சொல்லிக் கொடுத்ததை சொல்கிறான் எனக் கூறினார். இதனை கேட்ட திமுக நிர்வாகி, அந்த இளைஞரை நோக்கி வேகமாக சென்று "உங்க அம்மாவும், அப்பாவும் வந்து கோயில் கட்ட பணம் கொடுத்தார்களா?" என்று மிரட்டல் விடுத்தார். யாரு சொன்னது என்று என்று தெளிவாக சொன்னால் பேத்துபுடுவேன். ஊருல எங்கேயும் நடமாட முடியாது. புள்ளைகளையா வளர்க்கிறாய்?" என்று மிரட்டினார்.

கெட்ட வார்த்தை
இவ்வாறு பேசியதற்கு இடையிடையே அந்த இளைஞரையும் அவரது தந்தையையும் அசிங்கமான வார்த்தைகளை கொண்டு திட்டி மிரட்டல் விடுத்தார் மாணிக்கம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

கட்சியிலிருந்து இடை நீக்கம்
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அறநிலையத்துறையின் மாரியம்மன் கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை தகாத முறையில் திட்டிய சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து உள்ளார்.

துரைமுருகன் அறிவிப்பு
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி.மாணிக்கம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications