சேலத்தில் தேர்தல் பயிற்சிக்கு வந்த ஆசிரியை திடீர் மரணம்! தேர்தல் பணியால் மனஉளைச்சலா?
சேலம்: சேலத்தில் வாக்குச் சாவடி அலுவலர் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் நித்யா. இவர் சேலம் மாவட்டம் தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
வயநாடு காத்திருக்கிறது தான்யாவுக்காக.. கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர்!
இந்தப் பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் நித்யாவும் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மீட்டு அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தேர்தல் பணியில் கடந்த சில நாட்களாக ஆசிரியை நித்யா மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.