Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் தேர்தல் பயிற்சிக்கு வந்த ஆசிரியை திடீர் மரணம்! தேர்தல் பணியால் மனஉளைச்சலா?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் வாக்குச் சாவடி அலுவலர் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் நித்யா. இவர் சேலம் மாவட்டம் தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

Government teacher Nithya died while shewas in election training

இந்தப் பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் நித்யாவும் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மீட்டு அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தேர்தல் பணியில் கடந்த சில நாட்களாக ஆசிரியை நித்யா மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+