சேலம் அருகே மகனுக்கு விஷ ஊசிப்போட்டு கருணைக்கொலை செய்த தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது
சேலம்: சேலம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், மகனுக்கு விஷ ஊசிப்போட்டு கருணைக்கொலை செய்ததாக தந்தை, மருத்துவ ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
Recommended Video
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ளது கட்சுபள்ளி கிராமம். இங்குள்ள குட்டைக் காரன் வளவு, இப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இவரது மனைவி சசிகலா, இவர்களுக்கு செந்தமிழ்-18, வண்ணத் தமிழ்-14 என இரு மகன்கள் இருந்து வந்தனர் .
இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வண்ணதமிழ் சைக்கிள் ஓட்டி பழகிய நிலையில், கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். காலில் காயமடைந்த வண்ண தமிழுக்கு அப்போதிருந்த கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து இருந்த சூழ்நிலையில், உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய்
இதனால் சிறுவனின் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவம் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் வண்ணத் தமிழின் காலில் காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுநோய் உருவானதாகவும் அது மிகவும் மோசமடைந்து மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

கருணை கொலை
இதனால் பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் வண்ணத் தமிழின் காலில் ஏற்பட்ட புற்று நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்ததாம். இதனால் வண்ணத்தமிழ் கடும் வேதனையில் துடித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சிகிச்சை அளிக்க பணம் இல்லாத நிலைக்கு பெரியசாமி தள்ளப்பட்டுள்ளார். இது ஒருபுறம் எனில் மகனின், துன்பத்தை காணப் பொறுக்காத பெரியசாமி சிறுவனை கருணை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கொலை
இதற்காக எடப்பாடி பகுதியில் உள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரை அணுகியிருக்கிறார் பெரியசாமி. அவரிடம் தன் மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து விடும்படி கெஞ்சியிருக்கிறார். இந்நிலையில் ஞாயிறு அன்று மாலை பெரியசாமி வீட்டுக்கு வந்த மருத்துவ உதவியாளர் வண்ணத் தமிழுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்டு சிறிது நேரத்தில் வண்ணத் தமிழ் சுருண்டு விழுந்து இறந்தார் என்று அப்பகுதியினர் கூறியிருக்கிறார்கள்.

3 பேர் கைது
இதனிடையே வண்ணத் தமிழ் இறந்தது குறித்து அப்பகுதியினர் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொங்கணாபுரம் காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ ஊசி போட்டு கொன்றதாக வண்ணத் தமிழின் தந்தை பெரியசாமி, மருத்துவ உதவியாளர்கள் பிரபு, வெங்கடேசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications