சொகுசு காரில் வைத்து இளம்பெண் படுகொலை.. காரைக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை: காரைக்குடி அருகே சொகுசு காரில் வைத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் காரில் கொல்லப்பட்டவர், காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி குமார் மனைவி மகேஸ்வரி (35) என்பது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டி குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (35) இன்று காலை தனது சொகுசு காரில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி பகுதியில் தைலமர காட்டுப்பகுதியில் அவரது காரிலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாகக் கிடந்தார்.

காரில் இருந்த மகேஸ்வரின் உடலைக் கைப்பற்றி குன்றக்குடி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தேவகோட்டை டிஎஸ்பி பொறுப்பு கௌதம் விசாரணை மேற்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சிவகங்கையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் முகுளி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இளம்பெண் காட்டுப்பகுதியில் காரில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications