நாளை மறுநாள் 5 மாநில சட்டசபை தேர்தல் ரிசல்ட்-'சிவகாசி'யே பட்டாசு வெடிச்சு கொண்டாடுது- ஏன் தெரியுமா?
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகள் இந்த ஆண்டு 2-வது தீபாவளியை கொண்டாடுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ6,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஆர்டர்கள் குவிந்து வருவதுதான் இதற்கு காரணம்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல நூறு பட்டாசு ஆலைகள் சிறியதும் பெரியதுமாக இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் சிவகாசி பட்டாசு ஆலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர்.

கடந்த காலங்களைப் போல இல்லாமல் அண்மைகாலமாக பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் பட்டாசு தொழில் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு சுமார் ரூ6,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருந்தது. பட்டாசு தொழிலில் உருவாகும் நெருக்கடிகளை எதிர்கொண்டு அதற்கேற்ப தங்களை பட்டாசு ஆலைகள் உருமாற்றம் செய்து கொள்வதால் இந்த ஆண்டு வர்த்தகம் திருப்திகரமாக இருந்தது என்பது பட்டாசு தயாரிப்பாளர்களின் கருத்து.
உதாரணமாக கொண்டாட்டங்களின் போது சரவெடிகளை வெடித்து மகிழ்வது இயல்பான ஒன்று. ஆனால் சரவெடிகளுக்கு தடைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் சரவெடிகளுக்கு மாற்றாக ஷாட் வகை வெடிகளை களமிறக்கினர் பட்டாசு ஆலைகள். இந்த ஷாட் வகை பட்டாசுகளுக்கு இப்போது ஏக டிமாண்ட்.
பொதுவாக தீபாவளி முடிந்த பின்னர் வெளிமாநிலங்களுக்கு சென்று பட்டாசு ஏஜென்சிகளிடம் பணம் வசூல் செய்வது சிவகாசி பட்டாசு ஆலைகளின் வழக்கம். இந்த முறையோ இப்போதும் சிவகாசியில் வெளிமாநில வியாபாரிகள் சாரை சாரையாக குவிந்து ஆர்டர்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் தீபாவளி முடிந்த பின்னரும் சிவகாசி பட்டாசு ஆலைகள் படுபிஸியாக இருக்கின்றன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்துதான் பட்டாசுகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனை ஒட்டியே இப்புதிய ஆர்டர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் சிவகாசி இந்த முறை 2-வது தீபாவளியை கொண்டாடுகிறது என்கின்றனர் பட்டாசு தயாரிப்பாளர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications