இந்தியா- இங்கிலாந்து இடையே டி20 கிரிக்கெட் போட்டி! சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச ரயில் பயணம்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரயில் பயணத்தை தெற்கு ரயில்வே துறையின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளதாவது: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரெயில்வேயின் சென்னை பிரிவு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, போட்டியின் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புறநகர் ரயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது.
இலவச பயண வசதியின் முக்கிய விவரங்கள்: இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும். சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.
ஜனவரி 25, 2025 அன்று போட்டிகளுக்கு போய்விட்டு வரவும் மீண்டும் திரும்பவும் இந்த இலவச வசதி கிடைக்கும். பயணிகள்/பார்வையாளர்கள் தங்கள் பயணத்தின் போது தங்கள் அசல் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம்












Click it and Unblock the Notifications