42 ரன்கள் மட்டும்தான்.. லைப் டைம் ரெக்கார்ட் காலியாக போகுது.. விராட் கோலிக்கு கிடைத்த தரமான சான்ஸ்!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பிரம்மாண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேற இன்னும் 42 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தின் மீது குவிந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலிக்கு நாளைய ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி 34,357 ரன்களை விளாசி இருக்கிறார்.
இவருக்கு பின் 2வது இடத்தில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸ்களில் விளையாடி 28,016 ரன்களை குவித்துள்ளார். தற்போது விராட் கோலிக்கு சங்கக்காராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை விராட் கோலி 623 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,975 ரன்களை குவித்திருக்கிறார்.
இன்னும் 42 ரன்களை எடுத்தால், சங்கக்காராவின் சாதனையை எளிதாக முறியடிக்க முடியும். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 93 ரன்களை கடந்தால், சச்சின் டெண்டுல்கரின் முக்கியமான சாதனையையும் முறியடிக்க முடியும். இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 41 இன்னிங்ஸ்களில் 1,750 ரன்களை சேர்த்துள்ளார்.
தற்போது விராட் கோலி 33 இன்னிங்ஸ்களில் 1,657 ரன்களை சேர்த்து இருக்கிறார். இதனால் விராட் கோலி இந்த இரு சாதனைகளையும் எளிதாக முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் இழந்தது. அதற்கான பதிலடியும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications