இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் பலி
இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் பலியானார்.
பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் (வயது 44) ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் பணியாற்றியவர். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக செயல்பட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்புவில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி விஜய் நாகராஜ் உயிரிழந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் விஜய் நாகராஜ்.












Click it and Unblock the Notifications