இந்தியாவிலும் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்: திருமாவளவன்
கொழும்பு: ஐரோப்பிய யூனியனை போல இந்தியாவும், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரியுள்ளார் தொல்.திருமாவளவன்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் தெரிவித்ததாவது:
ஐரோப்பிய நாடுகள் ஒன்றியம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியதை பின்பற்றி பிற நாடுகளும் தடையை விலக்க வேண்டும். அதிலும், குறிப்பாக இந்தியா, இந்த முடிவை ஏற்று, இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன்.

டெசோ அமைப்பில் விடுதலை சிறுத்தைகள் இணைந்து செயல்பட்டபோது, அனைத்து நாட்டு தூதரகங்களிலும் தூதர்களை சந்தித்தபோதெல்லாம், நான் விடுதலை புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வந்தேன்.
விடுதலை புலிகள் இயக்கம் என்பது தேசிய இன விடுதலை இயக்கம், வெகு மக்களுக்கான விடுதலை இயக்கம். அதன்மீது பயங்கரவாத முத்திரை குத்தி, அல்கொய்தாவுக்கு இணையாக பட்டியலிட்டதுதான் மிகப்பெரிய பின்னடைவுக்கு காரணம். இப்போது தமிழ் சமூகத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இனிமேல் தமிழர்களுக்கு இது திருப்புமுனையை அளிக்கும். பிற நாடுகளும் இதை பின்பற்றும் என நம்புகிறேன். இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications