இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

இலங்கை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அடுத்த 10 நாட்கள் இலங்கையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் இலங்கை அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

இலங்கையில் புதன்கிழமை அன்று அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை 187 ஆக உயர்ந்தது. அதேபோல் ஒரே நாள் கேஸ் எண்ணிக்கை 3,793 ஆக அதிகரித்தது. தினசரி பாதிப்புகள் ஒரு மாதத்தில் சராசரியாக 3,897 ஆக அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் 3.2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

ஊரடங்கு

ஊரடங்கு


இதையடுத்து மருத்துவ வல்லுநர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.

நாட்டுக்கு நல்லது

நாட்டுக்கு நல்லது

இலங்கை சட்ட அமைச்சரான திஸ்ஸா விதாரணா, கடுமையான ஊரடங்கு மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் நம்பவுர். இவர்
அரசு எங்கள் பேச்சைக் கேட்டால் அது எங்கள் தலைவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது" என்று கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர்

இந்நிலையில் "இன்று (20/08) இரவு 10 மணி முதல் திங்கள் (30/08) வரை நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்" என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்ஷ

கோத்தபய ராஜபக்ஷ

அதிபர் கோத்தபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் தொடர்பான அதிபர் மாளிகை பணிக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்து விட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல விஷயங்களுக்கு தடை

பல விஷயங்களுக்கு தடை


தற்போதைய நிலையில் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அதிகாரிகள் ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம்

சினோபார்ம்

இலங்கையின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் , மாடர்னா , AstraZeneca மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கை அங்கீகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதில் இருந்து மொத்தம் 372,079 பேர் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6,604 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+