For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படை கைது செய்த 24 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

ராமேஸ்வரத்திலிருந்து 2 விசைப் படகுகளில் சென்ற 15 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதே போல புதுக்கோட்டையிலிருந்து 2 படகுகளில் சென்ற 9 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

The 9 Fishermen should be in jail upto March 15

இந்நிலையில் அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 24 மீனவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரையும் வரும் 15-ஆம் தேதி வரை யாழ்ப்பாணத்தில் சிறைக் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களை மார்ச் 17-ந் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வவுனியா சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.

English summary
The 9 Fishermen of Pudukkottai were put in Yazhppaanam Jail up to March 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X