பையில் இருந்த பாதி சாண்ட்விச்.. ரூ.1.43 லட்சம் அபராதம்.. இப்டிக்கூட பண்ணுவாங்களா?
பாதி சாப்பிட்டு மீதம் வைத்திருந்த சிக்கன் சாண்ட்விச்சிற்காக அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய மாடல் ஒருவர்.
சிட்னி: ஆஸ்திரேலிய மாடல் ஒருவர், பாதி சாப்பிட்டு விட்டு மீதம் வைத்திருந்த சாண்ட்விச்சுக்காக விமான நிலையத்தில் ரூ. 1.43 லட்சம் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாம் வாங்கும் உணவின் அளவு கடைக்கு கடை மாறுபடும். சில உணவகங்களில் விலை உயர்ந்த உணவுகளைக்கூட, ஸ்பூனில் ஒரே வாயில் சாப்பிட்டு விடலாம். அவ்வளவு குறைவாக இருக்கும். வேறு சில உணவகங்களிலோ நாம் கொடுத்த பணத்திற்கு ஈடாக அவர்கள் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட முடியாது. அந்தளவிற்கு அதிகமாக இருக்கும்.
அப்படியான சூழ்நிலைகளில் சாப்பிட முடியாத மீதமுள்ள உணவை பார்சலில் வாங்கிச் சென்று, வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நாம் திட்டமிடுவோம். ஆனால் அப்படி நினைத்து ஆஸ்திரேலிய மாடல் செய்த செயல் ஒன்று அவரைச் சிக்கலில் மாட்ட வைத்துள்ளது.

சாண்ட்விச்
சம்பந்தப்பட்ட அந்த மாடல் அழகியின் பெயர் ஜெஸிக்கா லீ. இவர் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்த போது, இடையில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் சாப்பிடுவதற்காக சப்வே சாண்ட்விச் ஒன்றை வாங்கியுள்ளார். ஏற்கனவே நிறைய பயணங்களால் சோர்ந்து போயிருந்த அவர், மீதமுள்ள 11 மணி நேரப் பயணத்தைக் கருத்தில் கொண்டு, 12 இன்ச் அளவிலானா பெரிய சாண்ட்விச்சை சாப்பிட வாங்கியுள்ளார்.

மீதி பாதி
ஆனால் அந்த சாண்ட்விச்சை அவரால் முழுமையாக சாப்பிட முடியவில்லை. பாதி சாண்ட்விச்சை சாப்பிட்டதும் அவருக்கு வயிறு நிரம்பி விட்டது. எனவே மீதியை பயணத்தின்போது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பத்திரப்படுத்தியுள்ளார். ஆனால் அதையும் அவரால் முழுமையாக சாப்பிட முடியாததால், அது அப்படியே அவரது பையிலேயே இருந்துள்ளது.

லெட்டூஸ்
பாதி சாப்பிட்ட நிலையில் இருந்த சாண்ட்விச்சுடன் ஆஸ்திரேலிய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார் ஜெஸிக்கா. தனது கைப்பை மற்றும் பிற உடைமைகளின் விபரத்தை மட்டும் கூறிய அவர், தனது பையில் சிக்கன் இருப்பதை மட்டும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் லெட்டூஸ் இருப்பதை அவர் விபரமாகக் கூறவில்லை.

ரூ. 1.43 லட்சம் அபராதம்
இதனால் அவருக்கு 2,664 ஆஸி டாலர் அபராதம் விதித்து விட்டனர் சுங்க அதிகாரிகள். இது இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சம் ஆகும். இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியிருப்பதாக தனது சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளார் ஜெஸிக்கா. மேலும் அதில், "நான் அண்மையில் தான் வேலையில் இருந்து விலகினேன்.

காஸ்ட்லி தவறு
இப்போது இவ்வளவு பெரிய தொகையை என்னால் உடனே செலுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது என்னுடைய தவறு தான் என்று நான் உணர்கிறேன். என் தவறுக்கு பொறுப்பேற்று அபராதத்தைக் கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறேன். என்னைப் போன்ற காஸ்ட்லி தவறுகளை யாரும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இதனை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆச்சர்யமும், அதிர்ச்சியும்
ஜெஸிக்காவின் இந்தப் பதிவு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கெல்லாம்கூட அபராதம் போடுவார்களா என ஜெஸிக்காவின் பதிவைப் பார்த்து, சிலர் ஆச்சர்யமும், மற்றும் அதிர்ச்சியும் கலந்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த தவறுக்கு இவ்வளவு அபராதம் விதித்திருக்க வேண்டாம், எச்சரித்து அபராதத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என ஜெஸிக்காவிற்காக இரக்கப்பட்டுள்ளனர் சிலர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications