பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அங்கு பணிபுரிந்த இருவர் பலியாகிவிட்ட சோகம் நடந்துள்ளது. இந்த ஆலைக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்த போது மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் பலியாகிவிட்டனர்.
பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த ஆலைக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியானது நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இரு மேற்கு வங்கத் தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications