ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் 2 இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து அலங்காநல்லூரில் 2 இளைஞர்கள் தீக்குள்ளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டில் வாழும் கரடி, சிங்கம், புலி ஆகியவற்றுடன் சேர்ந்து வீடுகளில் வளர்க்கும் கால்நடையான காளைகளும் காட்சிபடுத்தக் கூடாத பட்டியலில் விலங்குகள் நல ஆர்வலர்களால் சேர்க்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்கால தடை வாங்கிவிட்டனர்.
இத்தடை விதிக்கப்பட்ட செய்தி வெளியானது முதலே தென் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன் ஒருபகுதியாக 2 இளைஞர்கள் தீக்குளிக்கவும் முயற்சித்தனர். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியபடி ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க கோரியபடி தீக்குளிக்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களை பொதுமக்கள் தடுத்து மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நீடித்து வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications