அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளாவில் வழக்கமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: லட்சத்தீவு அருகே தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் திங்கட்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளாவில் வழக்கமான அளவு மழை பெய்யும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் லட்சத்தீவு அருகே தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் லட்சத்தீவு, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் தீவிரம் அடைந்து தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 20 நாட்களுக்கு தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வழக்கமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து சில நாட்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் திருவனந்தபுரத்தின் மேற்கு கடலோரப் பகுதி, கர்நாடகாவின் கடலோர பகுதி, கோவா-கொங்கன் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications