2018 தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்காக புதிய செயலி அறிமுகம்
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் முக்கியமான திட்டங்கள் பலவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேளாண்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். மேலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். விவசாயிகளுக்கான திட்டங்கள், அறிவுரைகள் எல்லாம் இதன் மூலம் தெரிவிக்கப்படும். இலவசமாக பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும்.