சென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை!
சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. 300-500 மி.மீ மழை வரும் சில நாட்களில் பெய்ய கூடும் என்று எச்சரிக்கிறது பிபிசி.
Recommended Video

சென்னை: சென்னையில் மேலும் 500 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.
பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

நேற்று மாலையே எச்சரிக்கை
இந்தநிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் நேற்று மாலை ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

அபாய கட்ட வெள்ளம்
மற்றொரு டிவிட்டில் "தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

சொன்னதை போலவே
பிபிசி கூறியதை போலவே நேற்று வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. நேற்று பிபிசி வெளியிட்ட டிவிட்டில் 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது.
|
இன்னும் 500 மி.மீ
இந்த நிலையில் இன்று காலை பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. 300-500 மி.மீ மழை வரும் சில நாட்களில் பெய்ய கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகபட்சம் 500 செ.மீ மழை சென்னையில் பெய்யக்கூடும் என பிபிசி கூறியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழலை காட்டுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications