ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே லாரி மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் டிரைவர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

4 killed, 20 injured in van collision with lorry near Ambur

விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ஆஸ்டன் காலணி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். வழக்கம் போல இன்று காலையில் வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஏற்றி ஆம்பூர் காலணி தொழிற்சாலையை நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது போது சோலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர்உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சில கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையில் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+