For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில், கள்ளக்காதலி, 3 மகள்களை கொன்று பிணங்களோடு 4 நாள் உறவு வைத்த காமக்கொடூரன்! ஏன் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, ராயப்பேட்டை பகுதியில் 4 பெண்களை கொலை செய்த கொலையாளி சடலங்களோடு உடலுறவு கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரோ பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க இதுபோல கொலையாளி நாடகமாடியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ராயப்பேட்டை முத்து தெருவில் ராஜபகதூர் என்பவரது வீட்டில், முதல் தளத்தில், வாடகைக்கு வசித்து வந்தவர் சின்னராஜ் (35). இவருடன் கள்ளக்காதலி பாண்டியம்மாள் (38) என்ற பெண்ணும், அவரின் முதல் கணவன் மூலம் பிறந்த மகள்கள் பவித்ரா (18), பரிமளா (18), சினேகா (16) ஆகியோரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவுக்கு பின்னர் சின்னராஜ் வீடு திறக்கப்படாமலேயே இருந்துள்ளது. வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் இருந்து அதிகமாக துர்நாற்றம் வீசியதால், வீட்டு உரிமையாளர் ராஜா பகதூர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவலறிந்த ராயப்பேட்டை போலீஸார், அங்கு விரைந்து வந்து சின்னராஜ் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

கொலை

கொலை

வீட்டுக்குள், அப்போது பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டும், சினேகா அயன் பாக்ஸ் வயரால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டும் கிடப்பதை பார்த்து பரிசீலனை நடத்தினர்.

நிர்வாணம்

நிர்வாணம்

நான்கு சடலங்களுமே உடலில் ஆடை இன்றி நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பலாத்காரம் நடைபெற்ற படுக்கையறை போன்ற தோற்றத்தோடு கசங்கிய நிலையில் பெட்ஷீட் விரிப்புகள் கிடந்தன. பெண்ணுறுப்புகளில் விந்து வடிந்து காய்ந்த தடயம் இருந்தது.

தலைமறைவு

தலைமறைவு

இதனிடையே, தலைமறைவாக இருந்த சின்னராஜுவை, போலீஸார் தேடினர். மெரீனா கடற்கரையில் சின்னராஜை போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவிலேயே 4 பேரையும் சின்னராஜ் கொலை செய்ததும், பின்னர் 4 நாள்கள் சடலங்களுடன் அவர் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது. துர்நாற்றம் அதிகரித்ததால் தலைமறைவானதாகவும் தெரியவந்தது.

கொலை காரணம்

கொலை காரணம்

இதுகுறித்து சின்னராஜு அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியுள்ளதாவது: பவித்ராவை திருமணம் செய்து வைக்க நான் கேட்டு பாண்டியம்மாள் மறுத்ததால் கொலை செய்தேன். வெறியில் கொலை செய்தபிறகு என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை.

நாடகம்

நாடகம்

போலீசாருக்கு தகவல் தெரிந்து வந்தால், யாரோ மர்ம நபர்கள் நான்குபேரையும், பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து தப்பிவிட்டதாக நாடகமாடலாம் என்று நினைத்து அதற்கேற்ப படுக்கை விரிப்புகளை கசக்கி ஜோடித்தேன். பாண்டியம்மாள் அவரது மூன்று மகள்களின் சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்.

வெறியில் உறவு

வெறியில் உறவு

"பவித்ராவை எனக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தாயல்லவா, உனது முன்னிலையிலேயே எப்படி உறவு வைத்துக்கொள்கிறேன் பார்.." என்று பாண்டியம்மாள் சடலத்தை பார்த்து சவால்விட்டபடியே பவித்ரா சடலத்துடன் உறவு கொண்டேன். "நீ பவித்ராவை மணம் முடிக்க அனுமதிக்கவில்லை. நான் பவித்ரா மட்டுமல்ல, உன் 3 மகள்களுடனும் உறவு வைத்துக்கொள்கிறேன் பார்" என்றும் சடலத்தின் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தேன்.

சிக்கிய கொலையாளி

சிக்கிய கொலையாளி

சடலங்களின் ஆடைகளை அகற்றிவிட்டு வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஆசை தீர ரசிப்பேன். எனது வெறி அடங்கிய பிறகுதான் தலைமறைவானேன். இந்நிலையில் போலீசில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சின்னராஜு வாக்குமூலம் அளித்துள்ளார்.

English summary
4 women killed by a man in Chennai, illicit relationship is lead to the murder, and the killer try to confuse police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X