ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு ஒன்று கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அந்த படகில் இருந்த 6 மீனவர்களை கைது செய்தது.

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. அத்துடன் தமிழக மீனவர்களின் 63 படகுகளும் இலங்கை வசம் உள்ளன.
தற்போதும் தொடர்ந்து மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதால் ராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications