விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டிய 'அடாவடி' ஐ.ஓ.பி வங்கி மேனேஜர் மீது வழக்குப் பதிவு
நெல்லை, மானூர் சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்பு கிருஷ்ணனைத் தற்கொலைக்குத் தூண்டிய வங்கி மேலாளர் பெருமாள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவி செய்துள்ளனர்.
நெல்லை: விவசாயி வேம்பு கிருஷ்ணனைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவமானடைந்த அவர் செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் பகுதியின் சித்தாறு பாசன விவசாயச் சங்கத்தை சேர்ந்தவர் வேம்பு கிருஷ்ணன். இவர் மானூர் இந்தியர் ஓவர்சீஸ் வங்கியில் பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் வாங்கியுள்ளார்.

'நீண்டநாள் பயிர்க்கடன்' என்ற பயிர்க்கடனை வாங்கிய வேம்பு கிருஷ்ணன், கடந்த வருடம் வரை சரியாக தவணை கட்டியுள்ளார். ஆனால், கடந்த ஒரு வருடமாக வேம்பு கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், வறட்சியாலும் அவரால் பயிர்க்கடனைக் கட்டமுடியவில்லை.
இந்நிலையில், அவர் தன் மனைவியின் நகையை அடகு வைக்த்திருந்தார். அதனை மீட்க வங்கிக்குச் சென்ற அவரை வங்கி மேலாளர் பெருமாள் அவமானக் குறைவாகத் திட்டியுள்ளார். மேலும், வேம்பு கிருஷ்ணன் நகையைத் திருப்பியதும், உடனே பயிர்க்கடனை கட்ட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மேலும் 3 மணிநேரம் காரணமின்றி அவரை வங்கியில் அமர வைத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த வேம்பு கிருஷ்ணன், வீட்டிற்கு வந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேம்பு கிருஷ்ணன் கடிதத்தில் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக மானூர் இந்தியவன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications