நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு - இரண்டு குழந்தைகளுடன் குடும்பமே தீக்குளிக்க முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை: சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் குடும்பமே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து பலியானது தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு தீக்குளிப்பு முயற்சி நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மரந்தை ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்.
இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்ய பிரியாதர்சனி. இவர்களுக்கு கார்த்திக், கவ்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர் மாலை குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது போலீசார் அவரிடம் சோதனை நடத்திப் பார்த்தனர். அவர்களிடம் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார், வெளியே சென்று விஷம் மற்றும் கெரசினை வாங்கி கொண்டு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவர்கள் இருவரும் விஷம் குடித்து விட்டு கெரசினை தங்கள் மேல் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பாய்ந்து வந்து அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களது சொத்துகளையும் ரொக்கப் பணத்தையும் அபகரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியே ஆட்சியரிடம் அசோக்குமார் குடும்பத்துடன் வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. தீக்குளிக்க முயற்சித்த அசோக்குமார் தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications