கமல் பேச்சில் தினகரனின் மீதான வன்மமும் வக்கிரமும் மட்டுமே தெரிகிறது: நாஞ்சில் சம்பத் தாக்கு
கமல் பேச்சில் தினகரன் மீதான வன்மமும், வக்கிரமும் மட்டுமே தெரிகிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து கமல் தெரிவித்து இருக்கும் கருத்துகளில் தினகரனின் மீதான வன்மமும், வக்கிரமும் மட்டுமே வெளிப்பட்டு உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்து இருந்தார். அதில், ஆர்.கே நகர் மக்கள் பணத்துக்கு விலை போய் விட்டார்கள். திருடனிடமே பிச்சை எடுப்பது போல இருக்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்? இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கருத்துகள் டி.டி.வி தினகரன் தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தினகரனின் வெற்றி பிரம்மாண்டமானது; பிரமிக்கத்தக்கது. அதை ஜீரணிக்க முடியாமல் கமல் திணறுகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் முக்கிய தங்க மகுடம் ஒன்று தரையில் கிடக்கிறது; யாரும் இல்லா நேரத்தில் அதை எடுத்து கமல் தலையில் வைத்து கொள்ள துடித்துக்கொண்டிருக்க, தினகரன் அந்த கனவில் கல்லை எறிந்து இருக்கிறார். அந்த கோபத்தில்தான் கமல் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்.
தேர்தல் சமயத்தில் எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல், இத்தனை நாட்களுக்கு பிறகு எதற்காக இப்படி ஒரு கருத்தை தெரிவிக்க வேண்டும். வேண்டுமென்றால் அப்போதே களத்தில் இறங்கி இருக்கலாமே ? இந்த பேச்சின் மூலம் மக்கள் மீதான அக்கறை தெரியவில்லை; தினகரன் மீதான வன்மமும், வக்கிரமும் தான் வெளிப்பட்டு உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications