புதிய சட்ட விதிக்கு எதிராக சென்னையை குலுங்க வைத்த வக்கீல்கள் பேரணி! அமைதியாக முடிந்தது
சென்னை: வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வக்கீல்கள் சென்னையில் குவிந்தனர்.
வக்கீல்களாக பதிவு செய்துள்ளவர்கள், நீதிபதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோ அல்லது பேரணிகளை நடத்துவதோ அல்லது நீதிபதிகள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறினாலோ அல்லது மது அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாலோ அவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுத்து அந்த வக்கீல்களை தொழில் செய்ய தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.

வக்கீல்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தம் தமிழக அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்ட விதிகள் திருத்தத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வக்கீல்கள் மீது நேரடியாக உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது வக்கீல்களின் தொழில் உரிமையையும், பேச்சுரிமையையும் பறிப்பதாகும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்ட திருத்தத்தை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர்.
வக்கீல்களின் பேரணி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் தொடங்கி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மதியம் 12.30 மணியளவில் முடிந்தது. பேரணிக்கு, சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ் தலைமை தாங்கினார். பேரணி நிறைவில், உரையாற்றிய அவர், வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வக்கீல்கள் போராட்டம் அமைதியாக முடிந்த நிலையில், சென்னை போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications