எடப்பாடியார் முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாம்.. தம்பிதுரை அடடே!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நிர்வரத்து அதிகரித்துள்ளதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நிர்வரத்து அதிகரித்துள்ளதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டம் கருப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

After Edappadi palanisami becomes CM only Mettur dam water inflow has increased: Thambidurai

நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அரசை யாரும் கலைக்க முடியாது என்றார். மேலும் ஆட்சிக்கு வர திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என ஆவேசமாக பேசினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும் அவர் புகழ்ந்தார். எம்ஜிஆரின் இந்த நூற்றாண்டு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக கருப்பூர் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+