பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்லதுதானாம்... 'ஆழம் பார்க்கும்' அதிமுக எம்.எல்.ஏ
அதிமுக, வரும் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்லதுதானே என்று பளிச்சென, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோவை: மத்தியில் ஆளும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது நல்லதுதான் என்றும், தமிழகத்திற்கு அப்போதுதான் வளர்ச்சித்திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் நிகழாது என்றும் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல அணிகளாக உடைந்துபோனது. இதனால் எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் அதிமுகவினர் இருக்கும் நிலையில்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளது அதிமுகவினரிடையே ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கடந்த மாதம் கல்குவாரியில் இறந்த தொழிலாளர்கள் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும். பிரச்சனைக்குரிய குவாரியை மூடாவிட்டால் சசிகலா அணியில் இருந்து அணி மாறுவேன் என்று கூறி,பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
அரசியல் ஸ்டண்ட்
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று,அரசு சர்ச்சைக்குரிய கல்குவாரியை மூடியது. இதேபோல் கடந்த 11-ம் தேதி,திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கனகராஜும் போராடினார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைந்தால் எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்வேன் என்றார்.
பாதுகாப்பு
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனகராஜ் கூறுகையில், "கொடநாடு பங்களாவில் போதிய காவலர்கள் இல்லாததால் கொலை,கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கிய பங்களாவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும்.
இணைவோம்
ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஓ.பி.எஸ். அணியின் 2 கோரிக்கைகளும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம்.
கூட்டணி வைக்கலாம்
மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும். அந்த வகையில் பாஜகவோடும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துகொண்டால் நல்லது." என்று தெரிவித்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications