ஜெ. சிகிச்சை குறித்த ஆவணங்கள் பத்திரமாக இருக்கு.. அப்பல்லோ பிசி ரெட்டி அறிவிப்பு
ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளதாக அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளதாகவும் அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 75 நாட்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
அவர் மரணமடைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்கள் பற்றி வாய் திறந்துள்ளார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி.

மருத்துவமனை மறுப்பு
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டவர்களுக்கு, அப்பல்லோ மருத்துவமனை, 'எங்கள் நிறுவனம் அச்சட்ட வரம்பிற்குள் வரவில்லை. விபரங்களை எங்களால் வழங்க இயலாது என்று தெரிவித்து விட்டது.

தகவல் அறியும் உரிமை
மதுரை மீனாட்சி அம்மன் குழந்தைகள் டிரஸ்ட் நிர்வாகி ஜெகதலபிரதாபன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 17 கேள்விகளுக்கு பதில் கேட்டு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு மனு அனுப்பி உள்ளார்.

மருத்துவமனையில் சேர்த்தது யார்?
அதில் மருத்துவமனையில் யாருடைய அனுமதியில் சேர்க்கப்பட்டார். அவர்களின் பெயர், முகவரி, ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரை யார் யார் அவரை பார்த்தனர்.
சசிகலா, இளவரசி ஆகியோர் எத்தனை முறை ஜெயலலிதாவை பார்த்தனர். எத்தனை நாட்கள் உடனிருந்தனர்
உடல் உறுப்புகள் எந்த தேதியில், எந்த நேரத்தில் செயல் இழந்தன என்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஆவணங்கள் விபரம்
ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இறந்தது வரை அளித்த சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் நகல்கள் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதில்கள், இதுவரை தலைமை செயலரிடம் இருந்து வராததால், மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மவுனம் கலைந்த பிரதாப் ரெட்டி
இதனிடையே இன்று கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாள்களில் 71நாள்கள் தாம் சென்னையில் தான் இருந்ததாக மேலும் ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications