பஸ் ஸ்டிரைக் கிடக்குது... தமிழகத்திற்கு 'எக்ஸ்ட்ரா கரண்ட்' கேட்கும் ஓ.பி.எஸ்.!
சென்னை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் அதைத் தீர்க்க அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கிறதா என்று சரிவரத் தெரியாத நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது வேலையில் கவனமாக இருக்கிறார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கக் கோரி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தியான 150 மெகாவாட் மின்சாரத்தில் அதிமுக தலைமையிலான அரசு எடுத்த முழு முயற்சியின் காரணமாக 100 மெகாவாட் மின்சாரம் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, தற்போது இரண்டாவது உலையில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 50 மெகாவாட் மின்சாரம் தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
எனவே, இன்னமும் ஒதுக்கப்படாமல் இருக்கும் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே வேளையில், அணு மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியிருந்ததையும் இங்கே நினைவுகூறுகிறேன்.
இந்த விவகாரத்தில் தாங்கள் மத்திய மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2வது உலையில் உற்பத்தியாகும் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications