ஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது சரியான நடவடிக்கை- காங், இடதுசாரிகள் வரவேற்பு!
சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்றுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்டவை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், ஆளுநரின் அறிவிப்பில் சர்ச்சையை கிளப்புவது சரியில்லை. சுப்பிரமணியன்சுவாமி பல குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தார். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை பிரதமர் மோடியும் கண்டிக்கவில்லை. 2 முறை முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சரியானது என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அரசுப் பணிகள் தொய்வின்றி நடக்கவே ஆளுநர் அறிவித்துள்ளார். பல கட்சிகள் கூறிய கருத்துக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், அரசு இயங்க வேண்டும் என்பதற்காக நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications