சேலம் 8 வழிச்சாலை தொடர்பான ஹைகோர்ட் உத்தரவு அன்புமணி, மன்சூர் அலிகான் வரவேற்பு
சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடி
சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகில் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, சேலம் - சென்னை 8 வழிச்சாலை வளர்ச்சித் திட்டம் கிடையாது. ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் சேலம்-சென்னை இடையே உள்ளது.
அரசின் வீம்பினால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசு பொய் தகவலை தருகிறது இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நடிகர் மன்சூர்அ அலிகான் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications