ஜல்லிக்கட்டுக்கு முடிந்தது... 'நீட்' தேர்வுக்கு முடியாதா? - அன்புமணி பொளேர்: வீடியோ
ஜல்லிக்கட்டுக்கு ஆறுநாளில் சட்டம் கொண்டு வர முடிந்தவர்களால், நீட் தேர்வுக்கு எதிராக சட்டம்கொண்டு வர முடியாதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஆறு நாளில் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வந்தார்கள். அவர்களால் ஏன் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டு வரமுடியவில்லை என அன்புமணி ராமாதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் ஆட்சியாளர்கள் ஆறே நாட்களில் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக உடனடியாக அவர்களால் சட்டம் கொண்டுவர முடியவில்லை.

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விஷயமாக சந்தித்தேன். மேலும், நீட் தேர்வு குறித்து தீர்வு காண்பதற்காக பாமக இளைஞரணி சார்பில் என் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications