தென் மாநிலங்கள் முழுமைக்கும் சப்ளை செய்ய திட்டம்! 3000 லிங்கா சிடிகள் பறிமுதல்
ஹைதராபாத்: லிங்கா திரைப்படத்தின் திருட்டு விசிடிகள் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மையத்தில் அதிரடி சோதனை நடத்தி லிங்கா படத்தின் 3 ஆயிரம் சிடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நேற்று திரைக்கு வந்த பிரமாண்ட திரைப்படம் லிங்கா. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வினுகொன்டா என்ற ஊரில் திருட்டி சிடி தயாரிக்கப்படுவதாக உள்ளூர் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்தின்பேரில், கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு பல மொழிகளின் புதுப்படங்களின் சிடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படங்கள் அங்கு சுட சுட பிரிண்ட் செய்யப்பட்டு வந்தது. மொத்தம் 45 ஆயிரம் திருட்டு சிடிகள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் லிங்கா திரைப்படத்தின் 3 ஆயிரம் சிடிகளும் அடங்கும். லிங்கா சிடிகளை இங்குதான் தயாரித்து தென் இந்தியா முழுமைக்கும் சப்ளை செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 15 கம்ப்யூட்டர்கள், மற்றும் சிடிகளை பறிமுதல் செய்த போலீசார், சிடி தயாரித்த நபரையும் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications