மத்திய அரசு தடை எதிரொலி- களை இழந்த அந்தியூர் மாட்டு சந்தை!
மத்திய அரசின் தடையால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்படுகிறது.
ஈரோடு: மத்திய அரசின் தடையால் அந்தியூர் மாட்டுச்சந்தை வழக்கமான உற்சாகமின்றி களையிழந்து காணப்படுகிறது. மற்ற மாநில வியாபாரிகளும் கூடும் அந்தியூர் மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

உற்சாகமிழந்த அந்தியூர்
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் புகழ்பெற்ற அந்தியூர் மாட்டுச்சந்தை வழக்கமான உற்சாகமின்றி காணப்படுகிறது.

ஞாயிற்று கிழமைகளில் கூடும் சந்தை
அந்தியூர் மாட்டு சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும். கேரள, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, பவானி, அத்தாணி மற்றும் பர்கூர் மலைப்பகுதியிலிருந்தும் மாடுகள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

குறைந்தளவு மாடுகள்
மாடுகள் வாங்கவும், விற்கவும் மாவடத்தின் பல இடங்களில் இருந்தும், கர்நாடகா, கேரள வியாபாரிகளும் குவிவது வழக்கம். ஆனால் மத்தியரசின் கெடுபிடியால் மாட்டுச்சந்தைக்கு மிகவும் குறைந்தளவு மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆர்வம் காட்டாது வியாபாரிகள்
அதேபோல் அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. மத்திய அரசின் தடையால் மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications