செம்மரங்களை வெட்ட சென்றதாக ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: செம்மரங்களை வெட்டச் சென்றதாக 32 தமிழர்களை ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்ற ரயிலில் பயணம் செய்த 32 தமிழர்கள் செம்மரங்களை வெட்ட சென்றதாக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்களை பத்து பேராக பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டாவில் உள்ள காவல் நிலையங்களில் வைத்து தனித்தனியாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து அரிசி, ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 32 பேர் மீதும் செம்மரம் வெட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications