ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னை பூண்டி ஏரிக்கு நீர் திறப்பு!
Recommended Video
கண்டலேறு: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மையான ஏரிகளில் பூண்டி நீர்தேக்கமும் ஒன்று. கோடைகாலத்தில் இந்த ஏரி முற்றிலும் வறண்டு போய் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக திருவள்ளூர் உள்ளிட்ட பூண்டி ஏரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணநதி நீர் இன்று காலை திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும். இந்த நீரானது 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவுடனான கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்துக்கு 8 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அதிகாரிகள் குழு நேரில் சந்தித்து கிருஷ்ணநதிநீர் குறித்து விவாதித்தது. அப்போது தமிழகத்துக்குரிய கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications