மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!
ஆரணி அரசு மருத்துவரும் அவரது உதவியாளரும் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சிறுமியை மயக்க ஊசி போட்டு பல மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய மருத்துவரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் சென்னைக்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மகள் இருக்கிறார். அவரது மகளை உறவினர் சித்ரா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆரணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு, சித்ராவுக்கு பழக்கமுள்ள ஆண்கள் சுரேஷ் மற்றும் சுரேஷின் நண்பர்கள் சிலர் அவரை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதில் அரசு மருத்துவர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரும் சிறுமியை சீரழித்துள்ளனர். இதனால், சிறுமியின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து அவரை தாயார் ராணி சென்னைக்கே அழைத்து வந்துவிட்டார். அப்போதுதான் தாயாரிடம் நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார். அதையடுத்து ராணி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ஆரணிக்கு சித்ராவையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய சென்றனர். அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications