மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!
ஆரணி அரசு மருத்துவரும் அவரது உதவியாளரும் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சிறுமியை மயக்க ஊசி போட்டு பல மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய மருத்துவரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் சென்னைக்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மகள் இருக்கிறார். அவரது மகளை உறவினர் சித்ரா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆரணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு, சித்ராவுக்கு பழக்கமுள்ள ஆண்கள் சுரேஷ் மற்றும் சுரேஷின் நண்பர்கள் சிலர் அவரை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதில் அரசு மருத்துவர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரும் சிறுமியை சீரழித்துள்ளனர். இதனால், சிறுமியின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து அவரை தாயார் ராணி சென்னைக்கே அழைத்து வந்துவிட்டார். அப்போதுதான் தாயாரிடம் நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார். அதையடுத்து ராணி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ஆரணிக்கு சித்ராவையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய சென்றனர். அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications