ஆக்கிரமிப்புகளை அகற்றி பெயர் எடுத்த டிஎஸ்பி ஜெரினா... வயலை அழித்து பெயரை கெடுத்துக்கிட்டாரே?
ஆரணியை அடுத்த காமக்கூரில் நன்கு விளைந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழிக்க அனுமதி அளித்த டிஎஸ்பி ஜெரினா பேகம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Recommended Video

ஆரணி: ஆரணியை அடுத்த காமக்கூரில் இரு தரப்பினரிடையே பிரச்சினைக்குரிய இடத்தில் நன்கு விளைந்திருந்த நெற்பயிர்களை டிராடக்டர் மூலம் ஒருவர் அழித்ததை வேடிக்கை பார்த்த டிஎஸ்பி ஜெரினா பேகம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆரணியை அடுத்த காமக்கூரை சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும், சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இது தொர்பான வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்குரிய நிலத்தில் சாவித்திரி நெற்பயிர் வைத்துள்ளதாக சாமுண்டீஸ்வரி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஒரு சாராருக்கு ஆதரவு
இந்த விவகாரத்தில் போலீஸார் புகார் அளித்த சாமுண்டீஸ்வரிக்கு ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிராக்டரின் குறுக்கே படுத்த பெண்
டிஎஸ்பி இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே சாமுண்டீஸ்வரியின் உறவினர் டிராக்டரை விவசாய நிலத்தில் இறக்கி விளைந்த பயிர்களை அழித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி ஓடி சென்று டிராக்டரின் குறுக்கே படுத்துக் கொண்டார்.

விவசாயி குற்றச்சாட்டு
இதுகுறித்து சாவித்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும் சாமுண்டீஸ்வரியும் உறவினர்கள். எங்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் எங்கள் உயிராக நினைத்த பயிர்களை எதிர் தரப்பினர் டிராக்டர் கொண்டு அழித்தனர். இதை தடுக்காத டிஎஸ்பி வேடிக்கை பார்த்தார். இதனால் நாங்கள் வேதனைப்படுகிறோம் என்றார்.

பயிரை அழிக்கக் கூடாது
புறம்போக்கு நிலமாகவே இருந்தாலும் விளைந்த பயிரை அழிக்கக் கூடாது என்று கூடவா இந்த டிஎஸ்பிக்கு தெரியாது. பயிரை அழிப்பதும் உயிரை அழிப்பதற்கு சமம் என்று சட்டம் கூறுகிறது. இதை சட்டம் ஒழுங்கு படித்தவர்களே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணி டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெரினா பேகம் 40 ஆண்டுகால
சாலை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். அகற்றப்பட்டவுடன் மீண்டும் வியாபாரிகள் கடை வைத்தால் அவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.1000 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிப்பது என்று உத்தரவிட்டுள்ளார். இத்தகைய கடும் நடவடிக்கைகளால் ஜெரினா பேகத்துக்கு நற்பெயர் கிடைத்தது. அந்த பெயரை அவர் ஒரே நாளில் கெடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications