பேரறிவாளானுக்கு பரோல்... அமைச்சர் சி.வி. சண்முகத்தை சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை
சிறையில் உடல்நலக்குறைவால் துன்பப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு பரோல் தர வேண்டும் என அற்புதம்மாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து, மகனை பரோலில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இவருக்கு அண்மைகாலமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் அமைச்சர் சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து, பேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.

அதனையடுத்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், 'நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா அரசுதான் பரோல் வழங்கியது. அதுபோல் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் கொடுக்க வேண்டும்' என கேட்டார். ஆனால் அந்தக் கோரிக்கை கடந்த ஒருமாத காலமாக பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் சி.வி சண்முகத்தை அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளனுக்கு பரோல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளானுக்கு பரோல் கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications